இந்து முஸ்லீம் கலவரங்களின் பயனாளிகளும் பலியாடுகளும்...

இந்து முஸ்லீம் கலவரங்களின் பயனாளிகளும் பலியாடுகளும்


இந்து வீட்டில் குடியிருப்பதும் முஸ்லீம் வீட்டில் விருந்துண்பதும் சொந்த பந்தங்களை போல வாழ்வதும் இந்த மதவாதிகளை சும்மா இருக்க விடுவதில்லை

இன்றைக்கு யார் வேண்டுமானாலும் ஒரு மதரீதியாக மக்களை சேர்த்துவிட முடியும் அதற்கு தேவை வெறும் வெறுப்புணர்ச்சியை தூவிவிடும் பேச்சும் அதை செயல்படுத்த சில தொண்டர்களும் இருந்தால் போதும்


குண்டு வெடிப்புகளை வன்மையாக கண்டிக்கும் நாம் சிறுபான்மையினர் மீதான காழ்புணர்ச்சியை எப்போதாவது கண்டித்தோமா என்பதை நினைவில் கூறமுடியுமா?

இந்துமதத்துக்கோ அல்லது இஸ்லாம் மதத்துக்கோ சண்டை அல்லது பிரச்சனை என்று யாரும் நினைத்து விட வேண்டாம் தங்கள் மத அடையாளங்களுக்கான சண்டையே இது

இந்து முஸ்லீன் ஒன்றுமைக்கான காரணங்கள் ஒரு நூறு சொல்லப்பட்டால் அவர்களை பிரிப்பதற்கும் அதன் மூலம்
தனது சொந்த லாபம் அடைவதற்கும் இங்கெ பலநூறு காரணம் சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள்

இன்று உழைக்கும் மக்கள் முன்னுள்ள பிரச்சனை விலைவாசி உயர்வு ,அரசின் மெத்தன போக்கால் தொழில் துறைகள சீர்குழைவு , லஞ்சம் , ஊழல் என்கிற முதலைகள் ஏன் இன்னும் பதுங்கு குழிக்குள் இருக்கின்றன

மேலே மத பிரச்சனை கொந்தளிக்கும் வரையில் இவை சுகமாக வேட்டையாடலாம் மக்கள் அனைவரும் மனிதாபிமான அடிப்படையிலோ அல்லது வர்க்க அடிப்படையிலோ ஒன்று சேராதவரை இந்த சூரண்டல் வாதிகள் பாடு கொண்டாட்டம்தான்

பொருளாதார நோக்கங்கள் மதச்சண்டைகளில் இல்லை என்பவர்கள் குருடர்களே

மதச்சண்டையை உருவாக்குபவன் நேரடியாக அல்ல மறைமுகமாக பொருளாதார நலன்களை அடைகிறான்

இந்த சண்டையில் ஈடுபட்டு செத்து போனவர்கள் அல்லது
கொல்ல பலிகடாவாக ஆக்கப்பட்டவர்கள் சாதாரண உழைக்கும் மக்களே .

பாதிக்கப்படுபவர்கள் இவன் அவன் என்றில்லாமல் அப்பாவி பொதுமக்களே ,

மதங்கள் மக்களை மயக்கும் அபினி மட்டுமல்ல மதங்கள் மக்களை கொலைகாரர்கள் ஆக்குகிறது பலியாகவும் செய்கிறது ஏனெனில் மதங்கள் மனிதனை சிந்திக்கவிடுவதில்லை .

வெறும் நம்பிக்கைகள் மீது அறிவாயுதத்தை செலுத்தி
உண்மையை உணராதவரை மதங்களின் சண்டைகளுக்கு பஞ்சமில்லை

நான் ஏன் அவனை கொல்லனும் என்கிற கேள்வியை
மனிதாபிமான முறையில் மனிதர்கள் கேட்காதவரையில்
மதத்தை வைத்து சுரண்டுபவர்களின் ஆட்டம் நிக்காது


இந்தியாவின் அரசியல் லாபங்களை அடைய உருவாக்கிய பஜாக போன்ற கட்சிகள் ஏற்கனவே அமுந்தி போயிருக்கும்
இந்தி முஸ்லீம் பகையை புகை போட்டு கிளப்பி விட்டு
லாபமடைகிறதென்றால்

மதசார்பற்ற கட்சி எனும் காங்கிரஸ் பெரிதாக எதையும் செய்வதில்லை இதுவும் இன்னொரு பஜகவாகவே நடந்து கொள்கிறது .

யார் பயனாளிகள் என்பதை உணாராத வரை நாம் பலியாடுகளே
View or comment on தியாகு ...'s post »
The Google+ project is currently working out all the kinks with a small group of testers. If you're not able to access Google+, please check again soon.
Learn more about Google+
You have received this message because தியாகு ... shared it with thiagu1973.raja@blogger.com. Unsubscribe from these emails.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post