ஸ்பெக்டரம் ஊழலே இல்லையா?

ஸ்பெக்ட்ரம் ஒரு தொகுப்பு :


ஸ்பெக்டரம் என்றால் என்ன ?

பத்ரி எழுதிய பதிவு இங்கே
http://thoughtsintamil.blogspot.com/2008/10/blog-post_12.html

மின்காந்த புலம் என்பது ஒரு வளமே
அதன் விபரங்களை விளக்கியது நன்றாக உள்ளது  பத்ரிசார்
யுவகிருஸ்ணா கீழ் கண்ட சுட்டியில் வைக்கும் வாதங்கள் அசட்டுதனமானவை ஒரு அலைவரிசை ஒதுக்கீட்டுக்கு ஊழல் நடந்து இருக்கிறது
ஆனால் அவர் சொல்கிறார்

//AG அறிக்கை சுட்டிக் காட்டுவதைப் போல நிறுவனங்களுக்கு பெரியத் தொகைக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிறுவனங்கள் தாங்கள் அலைவரிசைக்காக செலவழித்த தொகையை, கூடுதல் லாபம் சேர்த்து மக்களிடம்தானே பெற நினைப்பார்கள்? //
மக்களிடம் நிறுவனங்கள் வாங்க நினைப்பது இருக்கட்டும் நிறுவனங்களிடம் இராஜா எவ்வளவு வாங்கினார்

இந்தியாவுக்கு மொபைல் போனையே ராசா கண்டு பிடிச்சு கொடுத்து இருக்கட்டும் ஆனால் அலைவரிசை ஒதுக்கீட்டை முதல் அரசுக்கு லாபமின்றி நட்டமாக கொடுத்தது மக்களுக்காகத்தான் என்பது கேலிக்கூத்து என்னமோ இவர்கள் மக்கள் நலனில் நெம்ப அக்கறை கொண்டவர்களாக சொல்வது அபத்தம்

http://www.luckylookonline.com/2010/11/blog-post_16.html


செய்தி :
// மத்திய தணிக்கை துறை வெளியிட்ட அறிக்கை நேற்று (நவ.16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது//

மத்திய அரசின் தணிக்கை துறை யுவகிருஸ்ணா சொல்வது போல குறைத்து கொடுத்தது மக்களுக்காகவே என சொல்லவில்லையே அது ஊழல் நடந்துள்ளது எனத்தானே சொல்கிறது

----------------------------------------------------
----------------------------------------------
புதுதில்லி, நவ.17 (டிஎன்எஸ்) 2-ஜி அலைக்கற்றை அலைவரிசை ஒதுக்கீடு மொத்தம் 122 பேருக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதில் 85 நிறுவனங்கள் தகுதி இல்லாத நிறுவனங்கள் என்று மத்திய தணிக்கை துறை கூறியுள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம் சம்பந்தப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை தொடர்பாக மத்திய தணிக்கை துறை வெளியிட்ட அறிக்கை நேற்று (நவ.16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் குறித்து சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன.

ஒதுக்கீட்டில் நடந்த தவறால் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், நிதித்துறை, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வழங்கிய ஆலோசனைகள் மீறப்பட்டுள்ளன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மொத்தம் 122 பேருக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதில் 85 நிறுவனங்கள் தகுதி இல்லாத நிறுவனங்கள் என்று மத்திய தணிக்கை துறை கூறியுள்ளது.
 
சில நிறுவனங்கள் முறைப்படி விண்ணப்பிக்கவில்லை. சிறு நிறுவனங்கள் தவறான தகவல்களை கொடுத்து இருந்தன. வேறு சில நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியற்று நலிவடைந்தவையாக இருந்தன. ஆனாலும் இந்த நிறுவனங்களுக்கு ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
 
அனைத்து விண்ணப்பங்களுமே சரியாக இருக்கிறதா? தகுதி இருக்கிறதா? என்று அதிகாரிகள் குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வும் முறையாக நடக்கவில்லை என தணிக்கை துறை தெரிவித்திருக்கிறது.
 
13 நிறுவனங்கள் போலி ஆவணங்களை கொடுத்து விண்ணப்பித்து இருந்தன. அதையும் கூட ஆய்வு செய்தவர்கள் கண்டு பிடித்து சொல்லவில்லை.  விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கு போதிய ஆட்கள் நியமிக்காததும், அனுபவம் உள்ளவர்களை நியமிக்காததும்தான் இதற்கு காரணம் என்றும் தணிக்கை துறை கூறியுள்ளது. இந்த தவறுக்கு அதிகாரிகளும் முக்கிய காரணம் என்றும் தணிக்கை துறை குற்றஞ்சாட்டி இருக்கிறது.
 
எனவே தகுதி இல்லாத 85 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட லைசென்சை ரத்து செய்ய தொலை தொடர்பு துறை முடிவு எடுத்து உள்ளது. இதுபற்றி சட்ட நிபுணர்களுடன் டெலிபோன் துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தணிக்கை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடக்கிறது. முதலில் 85 நிறுவனங்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதை தொடர்ந்து மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
 
லைசென்சு பெற்ற சில நிறுவனங்கள் அதற்குரிய கட்டணங்களை செலுத்தாமல் உள்ளன. நிபந்தனை படி இந்த நிறுவனங்களின் உரிமத்தையும் ரத்து செய்ய உள்ளனர்.
 
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம் சம்பந்தப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிறுவனம் ஸ்வான் என்ற பினாமி நிறுவனம் பெயரில் விண்ணப்பித்து உள்ளது. இதில் முழுமையான தகவல்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. தவறான தகவல்களும் கொடுக்கப்பட்டு இருந்தன. மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற விதித்திருந்த நிபந்தனைபடி இந்த நிறுவனத்துக்கு உரிமம் பெற தகுதி இல்லை. ஆனாலும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. எனவே இந்த நிறுவன உரிமமும் ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

--------------------------------------------------
மேலும் இதை மக்களுக்காக குறைத்து கொடுத்தார்கள் என்பதை மறுக்கும் வினவு கட்டுரை

http://www.vinavu.com/2010/11/19/2g-spectrum-scandal

//முதலாளிகளின் மோசடி இலாபம் என்ற கொள்ளையடிக்கப்பட்ட பொருள் பத்ரியின் கண்ணுக்கு மட்டும் மக்களுக்கு கிடைக்கும் மலிவான சேவை என்று தெரிவதற்கு காரணம் அண்ணன் பத்ரி சக முதலாளியாக இருந்து ஒரு முதலாளியின் 'துயரத்தை' பகிர்ந்து கொள்கிறார் என்பதே. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட ராசாதான் பேசப்படுகிறாரே ஒழிய அவருக்கும் அல்லா கட்சிகளுக்கும் கட்டிங் வெட்டிய முதலாளிகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த ஊழல் குறித்து இதுவரை இந்திய முதலாளிகளின் சங்கங்கள் எதுவும் மூச்சுக் கூடவிடவில்லை.//

விற்கும் பண்டத்தின் விலையை கருதிதான் ஊழல் நடைபெற்றதாக கூறும் கூற்றை அம்பலபடுத்துகிறது

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post