திருப்பூரில் வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி


      பஞ்சு ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் நூல்விலையை
குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் தேவைக்கு போக மீதமுள்ளவையே
ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு இன்று முதலாளிகள்
சங்கமும் தொழிலாளர் சங்கங்களும் இணைந்து வேலைநிறுத்தம் செய்கின்றன.

  சன் டிவி முதலாளி ஜால்ரா ஊடகங்கள் வழக்கம்போல
வேலை நடக்கிறது என சொன்னாலும் வணிகர் சங்கமும் இணைந்து
நடத்தும் இந்த வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது

   டி அசோசியன் இதன் மூலம் அரசுக்கு சப்போர்ட் செய்து
முதலாளிகள் மத்தியிலும் தொழிலாளர்கள் மத்தியிலும் அவபெயரை
சம்பாதித்து கொண்டுள்ளது.

  எத்தனை போராட்டத்தை முதலாளிகள் சங்கம் அறிவித்தாலும்
தொழிலாளர் ஒற்றுமை இன்றி அவை வெற்றிபெறாது என்பதை
இந்த வேலை நிறுத்தம் தெரிவித்து உள்ளது

  1.தனியார்மயம் தாராளமயம் கட்டற்ற ஏற்றுமதி
எனும் அரசின் கொள்கை மீண்டும் தவறென
நிரூபிக்கப்பட்டுள்ளது
  2.ஒற்றுமை நிறைந்த போராட்டங்கள் மூலம் இந்த
போலி கைக்கூலி அரசு அம்பலபடுத்தப்பட வேண்டும்
அதற்கு அனைத்து சங்களும் இணைய வேண்டும்
  3.போராட்டத்தில் கலந்து கொள்ளாத முதலாளி
சங்கங்கள் எதிர்காலத்தில் திருந்த வேண்டும்
 


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post