அபி அப்பா , லதானந்து, மங்களூர் சிவா என்ன குற்றம் செய்தார்கள்

-------------
சந்தனமுல்லைக்கு இழைக்கப்பட்டது அநீதி யாருக்கும் அந்த மாதிரி ஒரு அநீதி இழைக்கப்படகூடாது , சம்பந்தபட்டவர்கள் சந்தனமுல்லையை சந்தித்து மன்னிப்பு கேட்பது பற்றி எங்கு எப்போன்னு முடிவு செய்ய வேண்டும் . ஏனெனில் வினவின் மைய்ய பிரச்சனை மிக நியாயமானதும் சரியானதும் ஆகும்.

அதே நேரத்தில் வினவின் மேல் உள்ள தவறுகளை சுட்டி காட்டும் போது அதை வைத்து தப்பிக்க சம்பந்த பட்டவர்கள் நினைக்க கூடாது .

வினவு எப்படி நாட்டாமை செய்யலாம் என கேட்பவர்களில் வினவின் மேல் விமர்சனம் வைப்பவர்களும் இருக்கிறார்கள் மற்றும் நரசிம்மை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் விசயம் .

குழலி கேட்கிறார் வினவின் மேல் இருக்கும் விமர்சனம் அல்லது தவறுக்கு யார் பதில் சொல்வது அந்த கேள்வியின் மேல் உள்ள தார்மீக நியாயத்தை முல்லையின் மீதான தாக்குதலை மட்டுமே கேடயமாக கொண்டு வினவும் தட்டிகழிக்க கூடாது

-------------------------------------------------------------------------
திரு . முகில் அண்டு சந்தன முல்லை வினவை விமர்சிக்கிறோம் என்பது பொறுக்கி நரசிம்மை காப்பாற்றுகிறோம் என நீங்கள் புரிந்து கொள்ள கூடாது மேலும் உங்களது மன உளைச்சல் மற்றும் கடுமையான மனபாதிப்பை நாங்கள் உணரவில்லை என்றும் நீங்கள் அர்த்தம் செய்ய கூடாது.

அதே நேரத்தில் உங்களை காக்க எடுத்த நடவடிக்கையில் ஏன் அப்பாவிகள் பாதிக்கப்பட்டார்கள் என்ற கேள்விக்கும் பதில் வேண்டும் அதை வினவை நோக்கி வினவுவதை தவறென்றும் கொள்ள கூடாது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொறுக்கி நரசிம்மை கண்டித்து பதிவு போட்ட வினவின் கட்டுரை அவருடையதல்ல என தெரிய வந்த பிறகு இந்த கேள்வியை நாம் இரண்டு பேர் மேல வைக்கலாம் ,ஒன்று எழுதிகொடுத்த சிவராமன், எடுத்துபோட்ட வினவு தோழர்கள் .

//பெண் பதிவர்களிடம் 'ஜொள்ளு' விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் அபி அப்பா – லதானந்த், மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள். 'ஆபரேஷன் சல்மா' மூலம் பார்ப்பன ஜெயராமனின் முகத்திரையை கிழித்த பதிவர் பாலபாரதிக்கும், மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் சென்ஷிக்கும் இது தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரியும். //

அங்க ஒரு கற்பழிப்பு நடக்குதுன்னு போகிற போக்கில் வழியில் இருக்கிறவன் தலையில் அடித்துவிட்டு சென்று இருக்கிறார் சிவராமன் அல்லது வினவு அல்லது இந்த பதிவை எழுதிய அத்தனை பேரும் இதற்கு ஆதாரம் கேட்டால் அந்த பெண்களுக்கு மேலும் எஸ் எம் எஸ் மற்றும் மிரட்டல் போகும் அதனால் வெளியிட முடியாது என ஒரு காரணத்தை சொல்கிறார்கள் .

அப்போ யார் மேல வேணாலும் பெண்கள் குற்றச்சாட்டு வைக்கலாம் அதற்கு ஆதாரம் தரவேண்டியதோ வெளியிட வேண்டியதோ இல்லை என்று ஆகிறது .

ஒரு பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவன் செக்ஸ் டார்ச்சர் செய்தான் என ஒரு ஆணை நோக்கி ஈசியா சொல்லிடலாம் என்பதாகவே அர்த்தம் ஆகிறது .

ஏன் மங்களூர் சிவாவுக்கு ஒரு குடும்பம் இல்லையா , அபி அப்பாவுக்கு ஒரு குடும்பம் இல்லையா அவர்கள் இந்த பதிவை பார்த்து எத்தனை வேதனை பட்டு இருப்பார்கள்.

இத்தனைக்கும் மங்களூர் சிவாவின் அலுவலகத்தில் அத்தனை பேரும் அந்த பதிவை படித்து இருக்கிறார்கள் மங்களூர் சிவாவின் மனைவியும் ஒரு பதிவர் .

சரி இந்த ஆதாரங்களை பொதுவான ஒரு பெண் பதிவரிடம் கூட காட்டலாமே அப்படி எதாவது இருக்கும் பட்சத்தில் . அபி அப்பா வும் மங்களூர் சிவாவும் தங்களது சாட்டிங்கின் மூலம் பெண்களை செக்ஸ் டார்ச்சர் செய்தார்கள் என நிரூபிக்கலாமே .

(அதெல்லாம் நிரூபிக்க முடியாது , எங்கள கேள்வி கேட்டால் நீ பொறுக்கி நரசிம்மை ஆதரிக்கிற நீயும் மன்னிப்பு கேட்கனும் கேட்க ஆரம்பிப்பீங்கன்னு நினைக்கிறேன் .)

ஏன் ஒரு அவதூற்றை அல்லது குற்றச்சாட்டை எழுதினால் நிரூபிக்க வேண்டும் என்ற பேசிக் எண்ணம் கூட இல்லை உங்களிடம் .

முகில் பாதிக்கப்பட்டதுபோல அபி அப்பாவின் மகளுக்கு அப்பாவை பற்றி வந்த அவதூறு மன பாதிப்பை ஏற்படுத்தாதா, மங்களூர் சிவாவின் மனைவிக்கு ஏற்படுத்தாதா அந்த வருத்தமெல்லாம் சந்தன முல்லையின் வருத்தத்துடன் ஒப்பிட்டு தூக்கி எறியப்பட கூடியதா?

லதானந்துக்குன்னு ஒரு குடும்பம் இருக்குமே அந்த குடும்பம் இதை படித்து வருத்தப்பட்டு இருக்க மாட்டார்கள் அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்க மாட்டார்களா?

மன்னிப்பு கேட்கனும் என்று இவர்களை போல சொல்லவில்லை
இந்த ஆதாரங்களை கேட்டு ஒரு பதிவு கூட போடலாமே .

ஏன் இருட்டுக்குள் இந்த ஆதாரங்கள் வைக்க வேண்டும் தண்டணை மட்டும் வெளிச்சத்தில் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் .

விமர்சனங்களையும் கேள்விகளையும் காற்றில் பறக்கவிட்டு மேலும் மேலும்
விமர்சிப்பவர்களையும் , கேள்விகேட்பவர்களையும் ஆணாதிக்க பொறுக்கி
பட்டியலில் சேர்த்தீர்கள் என்றால் உங்கள் நியாயமான பதிவுகளை கூட
எவனும் மதிக்கமாட்டான் இதுதான் உண்மை .

நீங்களும் பெண்ணியவாதிகளா?

நாங்கள் பெண்ணியவாதிகளாக
இருந்தபோது
நீங்கள் அராஜவாதிகளாக
இருந்தீர்கள்
நாங்கள் ஆணாதிக்கவாதிகளாக
இருக்கிறோம் என
சொல்லிட்டு நீங்கள்
எப்படி பெண்ணியவாதிகளாகி
போனீர்கள்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

67 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post