அந்த தோழர்

ஆம் அவரை பற்றி சொல்லியாகனும் , எதற்கெடுத்தாலும் ஒரு கருத்து ஒரு நிலைப்பாடுன்னு சொல்லிட்டே இருப்பாரு .

இந்தியாவில் வறுமைன்னா அது அமெரிக்காவால தாம்பாரு . இந்தியா விண்வெளியில் முன்னேறியதுன்னா அது ரஸ்யாவாலதானென்னுவாறு .

ஒரு டீ அல்லது பீடிக்கு சும்மா அரைமணி நேரம் பேசுவாறு .

தோழர் பின்நவீனத்துவம் என்றால் என்னவென்றால் அது ஒரு கழிச்சடைத்தனம் என்பார் ஏன் தோழர் அப்படி சொல்றீங்க நீங்க கொஞ்சம் விரிவா படிக்க கூடாதான்னா?

அமெரிக்காவின் சிஐஏ இந்தியாவில் சிலருக்கு பணம் கொடுத்து
பின்நவீனத்துவம் பேச வைச்சதுன்னு உடுவாரு

கட்டுடைத்தல்னா என்ன தோழர்னா "சும்மாகாச்சியும் "இப்படி வார்த்தைகள்
போடுவாங்கதோழர் ஆனால் அது முதலாளித்துவ வர்க்கத்தின் எடுபிடின்னு
சொல்லி புடுவாரு .

இலங்கை பிரச்சனைக்கு எல்லாரும் ஜெயாவுக்கு ஓட்டு போட சொல்றாங்களே
உங்க கருத்து என்னவென சொன்னால்

"வேலைக்காகது" ஓட்டே போடபடாதுன்னுவாரு அப்படியா அப்புறம் எப்படி
ஈழத்தமிழனை காப்பாத்துறதுன்னா

ஓட்டு போட்டு எவனையும் காப்பாத்த முடியாதுன்னுடுவாரு
மீறி பேசினா

ஈழத்தமிழன் வேறு தேசிய இனம் அப்படின்னு அப்போ தென் அமெரிக்காவில்
தென் ஆப்பிரிக்காவில் இன்றுகூட சண்டை நடக்குது பல அப்பாவிகள்
கொல்லப்படுகிறார்கள் உங்கள் அனுதாபம் ஏன் இல்லைன்னுவாரு

அடப்பாவின்னுட்டு

சரி தோழர் முத்துகுமார் தீக்குளிச்சாரே அதுக்கு போனீங்களான்னா

ஆமாம் போனேன் என்னோட தோழர்களும் வந்து இருந்தாங்க
அப்படிம்பாரு .

சரி குமாரின் பாடியை கைப்பற்றி போராடி இருக்கலாமேன்னா
அதற்கு வி.சிறுத்தைகள் விடலைன்னுவாறு.

ஆனா முத்துகுமாரின் தமிழ் உணர்வை மதிக்கிறோம்னுவாறு
அப்புறம் தடாலடியா முத்துகுமாரின் கடிதத்தில் அரசியலே இல்லைன்னு
ஒரே போடா போடுவாறு .

அப்போ நீங்க சாவுக்கும் பொணாமா இருக்க மாட்டீங்க
கல்யாணத்திலும் மாப்பிள்ளையா இருக்க மாட்டீங்களான்னா

(அப்புறம் என்ன மயித்துக்கு நீங்க போனீங்கன்னு கேட்க தோணுச்சு விட்டுட்டேன்)

தோழர் இனவாதிமாதிரி எங்களால இருக்க முடியாதுன்னு சொல்லிடுவாறு

சரி தோழர் இன்னைக்கு வரைக்கும் போன மேக்கு அப்புறம்
ஏன் இன்னும் ஈழத்தமிழனுக்கு போராடவில்லை நீங்கள்னு கேட்டா

போராடினா சரியா வருமா
அப்புறம் ஊத்துற கஞ்சியையும் ஊத்தமாட்டான் சிங்களப்பய அப்படிம்பார்

முதலில் எதிர்க்க வேண்டியது இந்திய ஏகாதிபத்தியம்
அப்படின்னுவாறு சரி தோழர் அதுக்கு என்ன செய்தீங்கன்னு கேட்டா?

எங்களுக்கு ஈழத்த வச்சு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லைன்னு
ஒரே போடா போடுவாறு நாங்கென்ன ராமதாஸ் , வைக்கோவா இதெல்லாம் செய்ய அப்படின்னுவாறு

அது ஏன் தோழர் நேர்மையான சிந்தனையோ விவாதமோ இல்லைன்னு கேட்டா

அலோ கொஞ்ச நாளா நீங்க இனவாதி எக்ஸ் கூட ப்போனில் பேசியதாக அறிகிறோம் எனவே இப்படி பேசுறீங்க அப்படிம்பாறு

கொஞ்சமும் எதிர்ப்பாக்காம இருக்கிறப்போ

அமெரிக்காவில் இருந்து உங்களை டார்கெட்டு வச்சு எங்க கட்சியை இரண்டா
உடைக்க போறாங்க அதுக்கு நீங்க துணைபோகாதீங்கன்னுவாறு

அட என்ன தோழர் அமெரிக்காவை நான் பேமசா அப்படின்னா

உங்களுக்கு தெரியாது தோழர் இங்கே ஒபாமாவின் தனி படை
ஒன்று இயங்குதுன்னுவாறு

இப்படி பேசி பேசி எதையும் அவரு ஒத்துகிடாம பிடிகொடுக்காம
போறச்ச சொல்லிட்டு போவார்

தியாகு உங்களை மாதிரி ஆட்கள் குட்டி முதலாளி வர்க்கம்
அதான் இந்த கேள்வில்லாம் வருது இதே நீங்க பாட்டாளி வர்க்கமா
இருந்தா கேள்வியே வராதுன்னு

என்னமோ போங்க



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

9 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post