இரயிலை கவிழ்க்கும் நியாயம்

அந்த இரயிலை
கவிழ்பதற்கு முன்பாக
அவனுக்கு
கம்யூனிசம் சொல்லி
தரப்பட்டு இருக்குமா

அனைவரும் சமம்
எல்லா உயிரையும்
நேசி என்ற
மார்க்சின் போதனை
ஊட்டப்பட்டு இருக்குமா

சுரண்டல் இல்லா
சமூகத்தை நாம் உருவாக்க
மனிதனை நேசிக்கனும்
என்பது சொல்லப்பட்டு
இருக்குமா ?


அரச பயங்கரவாதம்
அதை எதிர்க்கும் ஆயுதம்
தூக்கியவர்களின்
பயங்கரவாதம்
சாவது என்னமோ
அப்பாவி சனங்களே
இதை சொல்லி
இருப்பார்களா?

அல்லது அமைப்புதான்
முக்கியம்
அது சொல்வதை செய்
என மூளையை
சலவை செய்து
இருப்பார்களா ?











--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post