அவனும் அவர்களும் பெண்களும்

அந்த மனிதனை பற்றி நான் உங்களிடம் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்
எந்த நேரமும் பெண்களை நிர்வாணமாக்கி சிந்தித்து கொண்டு இருப்பானோ என நான் அவனை பற்றி நினைத்ததுண்டு அல்லது அவன் ஆடையுடன் இருக்கும் பெண்களை கூட நிர்வாணமாக பார்கிறானோ என எண்ண தூண்டும் அவனது சிரிப்பூட்டும் விவரிப்புகள் ,அவன் பேசுதலில் உள்ள ஆபாசம் அந்த வன்முறை அவன் நகைச்சுவையாக பேசுவதால், முழுகிபோவதில்லை என நான் அவனை கண்டிப்பதுண்டு.

ஆனால், அதற்கெல்லாம் மசியாமல் அவன் பேச்சை தொடர்ந்து கொண்டிருப்பான் ஆனால் எனது குற்றசாட்டு அவன்மேலே இருப்பதை விட அவன் பேச்சை ரசிப்பவர்களின் மேல் எழுகிற எரிச்சல் மிக அதிகமானது
ஏனெனில் வேலைக்கு வரும் அனைத்து பெண்களையும் புணர்ச்சி அலையும் லோலாய்களாக ,அவன் சித்தரித்து அடிக்கும் காமெடிகளை கேண்டீன்களில் கக்கூசுகளில் நின்று பேசும் பேண்டு சட்டை போட்ட நாகரீகவாதிகள் போன்ற ஆடையுடுத்திய இவர்கள் ஏன் கேட்கிறார்கள் ?. என பல நாள் நான் யோசிப்பதுண்டு .

"எந்த பெண் வேலைக்கு வந்தாலும் இப்படி கமெண்டு அடிப்பியா "அதில் உன் தங்கையோ அம்மாவோ இருந்தால் அப்போதும் இப்படித்தானா என கேட்கும் தருணங்களில் வாய்மூடிகொள்ளும் இவனும் இவனது ரசிகசிகாமணிகளும் மீண்டும் அதையே தொடருவார்கள்.

எங்கேயும் சுற்றுலா செல்லும் இடங்களில் இவனது வர்ணிப்புகளில் அவர்கள் சிரிப்பது ஒரு கட்டத்தில் கவனிக்காமல் விட்டுவிடுவது என முடிவுசெய்துவிட்டேன் தனிபட்ட முறையில்
நான் மட்டுமே கண்டிப்பதால் என்மீது அவனுக்கும் இன்னும் சிலருக்கும் வெறுப்பு உருவாகி இருப்பதை உணரமுடிந்தது.

வேலைக்கு வரும் பெண்களை அவர்களது உறுப்புகளின் அளவுகளில் காமெடி செய்பவன் ரோட்டில் ,அல்லது அவன் செல்லும் திருமணங்களில் அல்லது அவன் செல்லும் இந்த "சிரிக்கும் "நண்பர்களின் வீடுகளில் உள்ள பெண்களை மட்டும் நல்லவிதமாக பார்பான என தெரியவில்லை ஆனால் சம்பந்தபட்டவர்களிடம் அந்த பெண்களை பற்றி ஜோக் அடிப்பதில்லை என்பதால்
இவர்கள் திருப்தியுடன் இருப்பார்கள் .

வேலைக்கு வரும் பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை என்பது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் தாம் . நேர போய் ஒரு பெண்ணை தொட்டு எதுவும் செய்ய முடியாதுஎன்பதால் இவனது எண்ணங்கள் இப்படி ஜோக்குகளாக விவரிப்புகளாக வெளிவருகிறது .

ஆபாசவர்ணனைகளை , யாரோடாவது பெண்களை சம்பந்தபடித்து அடிக்கும் ஜோக்குகளை மனமுவந்து சிரிக்கும் இந்த சுற்றி இருப்பவர்கள் பிறகு இவனை பற்றி என்ன இப்படி பேசுகிறானே என பிறகு வந்து முதலில் சொல்லி திரிவார்கள் பிறகு அவன் அப்படித்தான் என சொல்லிவிட்டார்கள் ஆனால் அவன் என்னமோ முன்னைகாட்டிலும் வேகமாக அதிக சுவையுடன் இதை பேச ஆரம்பித்து
இருக்கிறான் என்பது உண்மையே .

தண்ணி அடிப்பது , அதை வெளியில் சொல்வது முதலில் தவறாக கருதப்பட்டது பிறகு தண்ணிஅடிப்பதும் இந்த பாரில் உக்கார்ந்து இன்னாருடன் அடித்தேன் என சொல்லுவதும்" பேஷனானது" .

அதை போல இதை பெண்களை காமகண்ணுடன் பார்த்து அதை உருவகித்து பேசும் கீழ்மை சமூகம் முழுவதும் பரவி இருக்கிறதோ என அஞ்சுகிறேன் .

அலுவலகம் மட்டுமல்லாது பள்ளி மாணவர்களிடம், கல்லூரி செல்லும் மாணவனிடமும் விரவி கிடக்கலாம் .

அப்படி பரவி இருக்கும் பட்சத்தில் அதுதான் முதலில் களையப்படவேண்டியது என தங்களை ஒரு ஆண் என நினைக்கும் ஒவ்வொருத்தரும் செய்யும் செயல் என நான் நினைக்கிறேன் .












--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post