இது கவிதை அல்ல

என் உள்ளத்தை பிளந்து கொண்டு விழுகிறது
 
இன்னும் யார் யார் தீக்குளிக்க போகிறார்கள்
 
இறப்பதற்கு இங்கு பலர் தயார்
 
தீர்வு யார் தருவார்கள்
 
பிணம் பேசுவது போலிருக்கு
 
அன்றாடம் தலைவர்கள் அறிக்கை
 
உணர்வுமயமானவன் தமிழன்
 
வீரம் காதல் இதெல்லாம்
 
அந்த உணர்வுதான் குத்தி பார்க்கபடுகிறது
 
ஒரு படகில் ஏறி சென்றுள்ளார்கள்
 
எமது தோழர்கள் முல்லை தீவுக்கு
 
ஆமாம் இங்கிருந்து செத்தால்கூட
 
கேட்க நாதியில்லை அங்கே போய்
 
எம் தமிழர்களோடு சாவோம்
 
எழுதுகிற பேனாகூட காறித்துப்பும்
 
இதற்கு முன்பிருந்தே நாங்கள்
 
ஈழ ஆதரவாளர்கள்
 
என்பவர்களை பார்த்த்து
 
அறப்போராட்டம் செய்திருக்கலாமே
 
ராஜிவை ஏன் கொன்றார்கள்
 
தோல்வி அடைவது அவர்கள் தீர்மானித்தது
 
தோற்கும் போது தூவப்படும்
 
வார்த்தைகள்  இதெல்லாம்
 
உன் புண்ணுக்கு நானெப்படி அழமுடியும்
 
என சொல்பவர்கள் சொல்லும் சாக்காடு
 
எவனுக்காது துணிவும் நேர்மையும்
 
இருக்கான்னு கேட்க துணிவு வரலை
 
நானும் இவர்களுள் ஒருத்தன் தானே
 
தீ வைத்து கொண்டு முட்டாள் தனமாக
 
எரியாதே தமிழா
 
சாகட்டும் என நினைப்பார்கள்
 
ஒரு நாள் சூரிய உதயத்தின் போது
 
முற்றாக தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள்
 
எனவோ எதாகிலும் செய்தி மட்டும்
 
நமக்கு கிடைக்கலாம்
 
அதுவரை மரம்போல கிடக்கத்தான் வேண்டும் போல


--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post