ஈழத்து நண்பன்

சில பனைமரங்களும்
பல போர்களும்
நிறைந்தது
அவன் நாடு

இரத்தம்
ஆறாக ஓடும்
பூமியை
சேர்ந்தவன்

பதுங்கு குழிகளில்
பாத்தி கட்டி
வாழ பழகியவன்

என்னை வியந்து
பார்ப்பான்.

ஞாயிற்றுகிழமை
தவறவிடும்
படத்துக்காய்
நான் படும் கவலை
அவனுக்கு பகடி

சாதி சண்டைகள்
எங்கள் தலைவரின்
அறிக்கைகள்
விலாநோக
சிரிப்பான்

அடிக்கடி
சொல்லுவான்
நண்பா
வாழதெரியாத
உனக்கு ஒரு நாடு இருக்கு

எனக்கு ஒரு நாடு
இருந்தால்
உனக்கு வாழ
கற்று கொடுப்பேன்



--
தியாகு

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post