பதிவர் பட்டறை 2007

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பதிவர் பட்டறை நல்லபடியாக நடந்து முடிந்தது , நான் இந்த பட்டறையில் கலந்துகொள்ள இயலாமல் போனது இருப்பினும் எழுதிய அனைவரது பதிவுகளையும் படித்தேன் .
பட்டறையை திறம்பட நடாத்திய நண்பர்கள் பாலா ,பொன்ஸ் ,மா.சிவக்குமார் , லக்கி ,வரைவணை, மற்றும் எனக்கு தெரிந்திராத அன்பு நெஞ்சங்களுக்கு என்னுடைய அன்பையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன் .
மேலும் இம்மாதிரி பட்டறைகள் நடத்தினால் தமிழ் வளர்திடுமான்னு கேட்டும்தமிழியவாதிகள் எப்படி தமிழ்வளர்க்க போகிறார்கள் என்பதை தெரிவிக்கவேண்டும் .விமர்சிப்பது யாருக்கும் எளிது அல்லவா .
ஒரு பெரிய மாறுதலை கொண்டுவரும் விசயங்கள் ஒரு சிறிய ஆரம்பம்தான் கொண்டிருக்கும் என நினைக்கிறேன்.
மேலும் மாலன் - பெயரிலி விவாதம் இங்கேயும் நுழைந்தது வருந்துவதற்குரியது .
தமிழ் மணம் மற்றும் தேன்க்கூடு ஆகியவற்றை சார்ந்த சாராத அனைத்து நண்பர்களுக்கு எனது வேண்டுகோள் இதுதான் .
செயல்களில் ஈடுபடுபவரை பாராட்டுங்கள் அப்படி இல்லையெனில் அமைதிகாத்து அருளுங்கள் குத்தி புண்ணாக்க வேண்டாம் .
நட்புடன்
தியாகு

6 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post