உரையாடத்தான் பேசுகிறோம் ,உறுதி படுத்த அல்ல !

கருநிற மலைகளில்
பொழியும் நிலவையும்
சுடு கிற மணலின் அடியில்
கிளந்தெழும் துயரமும்
சொல்லப்படாத நாட்களால்
தள்ளப்பட்ட சேதியை
சுமந்து கொண்டு பயணிக்கும்
நானும் இருக்கும் கடற்கரை

அலைகளை அள்ளும்
கைகளில் ஒழுகும் நீரென
நினைவும் ஒழுக

அகலமும் நீளமும்
நீண்ட கடல்தனில்
கொட்டிய என் நினைவுகள்
இனி தினமும் தள்ளும்
அசலென மங்களில் தெரியும்
உன் கரைகளை !

(தலைப்பு சுகுணாவிடம் சுட்டது ;))

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post