ரிலையன்ஸுக்கு மூடுவிழா -கேரளாவில்

தோழர் பிரதாப் மடல்:
ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தி வரும் காய்கறி வியாபரத்தை உடனே மூடவேண்டுமென்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உணவுப்பொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திகுறிப்பு இங்கே கிடைக்கும் http://satrumun.blogspot.com/2007/07/blog-post_8116.html.

முதலில் மலிவு விலை காய்கறி வியாபாரம் என்கிற முகமூடியோடு களத்தில் இறங்கிய ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனம் இப்பொழுது சிறிது சிறிதாக ஏகபோக கொள்முதலில் ஈடுபட்டு காய்கறிகளை ஒட்டுமொத்தமாக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்கிறது. பின்னர் இது அந்த பகுதி குளி பதன களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 4 வகைகளாக பிரித்து கீழ்கண்ட முறையில் விற்பனை செய்கிறது.

முதல் வகை காய்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது.(உள்ளூரில் கிடைக்கும் விலையை விட வெளிநாட்டில் விலை அதிகம் கிடைக்கின்றது. அதனால் உள்ளூரில் விலை ஏறினாலும் அவர்களுக்கும் அரசுக்கும் அதைபற்றிய கவலை எதுவுமில்லை)

இரண்டாம் வகை காய்கறி அந்த காய்கறி கிடைக்காத இந்திய மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.(இதனால் பிரதான உணவுப்பொருளாக அதை பயன்படுத்தும் உள்ளூரில் விலையேற்றம், வெளி மாநிலத்திலும் அதிக விலையில் விற்றுக்கொள்ளலாம்)

மூன்றாம் வகை காய்கறி உள்ளூர் ரிலையன்ஸ் ஃபிரஷ் அங்காடிகள் மூலம் விற்பனை(இது சந்தை விலையைவிட 1 ரூபாய் அல்லாது 2 ரூபாய் குறைவு என சொல்லப்படுகிறது. இவர்களின் ஏகபோக கொள்முதலால் சந்தையில் தேவைப்படு அதிகரித்து சந்தைவிலை ஏறிவிடுகிறது. பின்னர் என்ன ரிலையன்ஸ் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடமிருந்து ஏகபோக கொள்முதல் செய்து அதை குளிர் பதன களஞ்சியத்தில் சில நாட்களுக்கு பதுக்கிவைத்தி்ருந்து அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது. இது உணவுப்பதுக்கல் சட்டப்படி குற்றம். ஆனால் நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு இயந்திரம் கையூட்டுபெற்றுக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

உதாரணமாக கடந்த மாதம் 3 ரூபாய்க்கு விற்ற கிலோ தக்காளி இன்று 32 ரூபாய்க்கு சந்தையில் விற்கிறது. கடந்த மாத ரிலையன்ஸ் விலை ரூ6 இந்த மாத ரிலையன்ஸ் விலை ரூ 30. இந்த தக்காளி கடந்த மாதம் ரூ4 க்கு வாங்கப்பட்டிருப்பதாக கொண்டால் பதுக்கலுக்காக அதன் குளிர்பதன களஞ்சிய செலவு உள்பட அதன் தற்போதைய கிலோ விலை ரூ6 க்கு மட்டுமே பிடிக்கும். ஆனால் விற்பனை விலை 30. லாபம் ரூ24. இதுதான் பகற்கொள்ளை மற்றும் உணவுப்பொருள் பதுக்கல் என்று 1960 களில் சொல்லிக்கொண்டிருந்தானர். இந்த முறை வணிகத்தினால் இந்தியா 1930 முதல் 1970 இல் பசுமைப்புரட்சி வரை பாதிக்கப்பட்டு வறட்சி மற்றும் பட்டினிசாவை சந்தித்துக்கொண்டிருந்தது. பின்னர் அரசு எல்லாவற்றையும் ரேஷன் கடைகளில் விற்க தொடங்கிய பிறகு பெரும் வணிகர்களில் ஏமாற்றுவேலை மற்றும் பதுக்கல் வணிகம் முடிவுக்கு வந்தது. இப்பொழ்து மீண்டும் பதுக்கல் வணிகம் புதிய பெயரில் புதியா அவதாரம் அரசின் ஆதரவுடன் அமுலுக்கு வந்துள்ளது.

நான்காம் வகை காய்கறி (அழுகலுக்கு சற்று முந்திய நிலையில் இருப்பது) ஹோட்டல்களுக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

--
வலைப்பூ(BLOG) : http://agnisiraku.blogspot.com/

நா.பிரதாப் குமார்.

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post