பார்ப்பனியமும் ஈவேராவும்

தந்தை ஈவேரா - காந்தி பற்றிய கட்டுரைக்கு பதிலளித்த பார்பனிய சாதி ஆதிக்க
சக்திகளுக்கு எனது பதில் இது

//கடந்த இதழில் வெளியான இந்த உரையாடலைப்படித்ததும் முதலில் எனக்கு எழுந்த
சில கேள்விகள்: 1927-இல் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த உரையாடல் ,
காந்தி இறந்த 1948-இல்தான் முதலில் வெளியிடப்பட்டதா? எனில் , 21 ஆண்டுகளாக
இதனை வெளியிடாமல் இருக்க என்ன காரணம் ? 21 ஆண்டுகளாக இந்த உரையாடல்
எங்கே ஆவணப்படுத்தப்ப்ட்டு இருந்தது , காந்தியின் இறப்புக்குப் பிறகே வெளியிடப்பட்டது
எனில் 21 வருடங்கள் கழித்து அந்த நேரத்தில் வெளியிடப்பட வேண்டிய அவசியம் என்ன? "வசதியாக "
காந்தி இறந்த பின் வெளியிடப்பட்ட ஒரு உரையாடல் இது என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்புள்ளதால்,
இதன் மூல ட்ரான்ஸ்கிரிப்ட் தருதல் நலம்.

தாஜ் எழுதியவற்றில் நகைச்சுவை மிகுந்த பகுதி,
சாதியை எதிர்த்தால் கொன்று விடுவார்கள் என்று ஈவேரா சொன்னாராம்,
அது உண்மையானதாம். பொய் சொன்னாலும் பொருந்தச்சொல்ல வேண்டும்.
இந்து என்ற அடையாளம் தாங்கிக் கொண்டு ஆனால் முஸ்லீம்களுக்கே முதன்மை
வாழ்வுரிமை என செயல்பட்டது காந்தியடிகளின் இறப்புக்குக் காரணம் ஆனது ( அது சரியா என்பது வேறு விஷயம்).
சாதி எதிர்ப்பால் சாவு என்றால் ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர், பாரதியார், நாராயண குரு, பூலே,
அம்பேத்கார் என அத்தனை சீர்திருத்தவாதிகளும் பார்ப்பனர்களால் கொல்லப்பட்டிருக வேண்டும்,
அப்படி ஏதும் நடந்ததாக வரலாறு இல்லை. //


இந்த நபர் தான் என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறாரா? காந்தி பெரியார் உரையாடலின் நம்பகதன்மையை

கேள்விகேட்டால் அதை மேற்கொண்டு ஏன் விவாதிக்கனும் .

சாதியை எதிர்த்தால் அல்ல சாதி அமைப்பை எதிர்த்தால் கொன்று விடுவார்கள் என பெரியார் சொன்னால்

அது பெரிய தப்பாம் என்ன காரணமென்றால் விவேகானந்தர் முதல் பெரியார் வரை அவர்கள் சாதி அமைப்பை

எதிர்த்து இருந்தும் கொல்லபடவில்லையாம் .

நல்ல சிரிப்பாத்தான் பேசுகிறார் .

அமெரிக்காவை எதிர்பவனை கொல்வார்கள் அனேகமா எல்லாரையும் கொல்வாங்களான்னா

அவங்களால எந்த இடத்தில் முடியுமே அங்க செய்வாங்க

இப்ப குஜராத்தில் பஜ்ரங்தல் கொலைவெறி ஆட்டம் போட்டாங்க தமிழ்நாட்டில் ஏன் முடியலை

அதுக்காக பஜ்ரங்தல் ஒரு சமாதான புறா என நம்ப முடியுமா.

//ராமசாமி நாயக்கர் கூட 60-வயதில் மகள் போன்ற ஒருத்தியை மணந்து 30 வருடங்களுக்கு
மேல் இரண்டாம் மண வாழ்க்கை வாழ்ந்து 90- வயது தாண்டி இயற்கையாய்த்தான் இறந்தார்.
ஆனால் அவரது கு-க்ளக்ஸ் -கான் வகை பாசிச வெறுப்பியல் குண்டர்களால் இன்றும் கூட
பார்ப்பனர்கள் ஆபாசமாகப் பேசப்பட்டும் , அடிக்கப்பட்டும், வெட்டப்பட்டும் ,
குண்டெறியப்பட்டும் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.//

பாசிச வெறுப்பியலே அடிநாத மாக கொண்டவர்கள் பாசிச வெறுப்பியலை பத்தி பேச
லாயக்கற்றவர்கள்
மேலும் சொல்லபோனால் பார்பனியத்துக்கு தற்போது பெரியார்காலத்திய எதிர்ப்பு இல்லை
என்றே சொல்லலாம்.

அவரு கல்யாணம் பண்ண விசயத்தையே இன்னும் எத்தனை நாளைக்கு சொல்வீங்க
போங்க வேற எதாவது நொட்டை இருந்தா சொல்லுங்க

//மட்டுமன்றி, இந்த உரையாடலில் ஆபிரஹாமிய மதங்கள் குறித்த காந்தியடிகளின் தெளிவான
சிந்தனையும் பதிவாகியிருக்கிறது: "கிறிஸ்துநாதர் என்ன சொன்னாரோ ,
அவர் சொன்னதாகச் சொல்லும் பைபிள் என்ன சொல்கிறதோ , அந்தப்படிதான் கிறிஸ்தவர்கள்
என்பவர்கள் நடந்தாக வேண்டும். முகம்மது நபி அவர்கள் என்ன சொன்னாரோ ,
குரான் என்ன சொல்லுகிறதோ, அதன்படிதான் முஸ்லீம்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும் ,
மாறுபட்டு ஏதாவது ஒரு திருத்தம் சொன்னால், அது மத விரோதமாக ஆகிவிடும்.
சொல்லுகிறவர் மதத்திற்கு வெளியில் வந்துதான் சொல்ல வேண்டும். உள்ளே இருந்து சொன்னால் ,
ஒழித்து விடுவார்கள் இதுதான் உண்மையான மதம் என்பவைகளின் தன்மை. ஆனால் , இந்து மதம் என்பது
இல்லாத மதம் ஆனதால் , அந்த மதத்தின் பேரால் யாரும் மகான்களாக ஆகி எதையும் சொல்லலாம் .
அப்படியே இந்துமதத்தில் ஏற்பட்ட பல பெரியோர்கள், மகான்கள் பலவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால் ,
நாமும் அந்த மதத்தை வைத்துக் கொண்டே அநேக சீர்திருத்தங்களை இந்தக் கால
மனிதவர்க்கத் தேவைக்கு ஏற்றபடிச் செய்யலாம்".//

முதலில் உரையாடலின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்டவர் இப்போ அதில் தனக்கு சாதமானபகுதிக்குள் குதித்து
சந்தர்ப்ப வாதமாக பேசுகிறார்.

மதத்தை வத்து கொண்டு செய்தநல்ல காரியத்தை விட மதத்தை மறுத்து பெரியார் என்ன செய்தாரோ அதுதான்
வீச்சாக மக்களிடம் சென்றது

விவேகானந்தர் சொன்னதை மடத்தில் சன்னியாசிகளே கடைபிடிப்பதில்லை இது நான் நேரில் கண்டது .

//தளைகள் அனைத்திலிருந்தும் விட்டு விடுதலையாகி நிற்க மனித மனங்களுக்கு
அறைகூவல் விடுப்பது இந்து ஞான மரபு. இன்னமும் கூட இறுகிய கோட்பாடுகளாலும்
பயங்களாலும் சிறைபட்டுக் கிடப்பது ஆபிரஹாமிய மதங்களின் இயல்பு.
இந்து தர்மத்தின் இந்த இளகிய தன்மைதான் ஈவேராவுக்கு இந்து தெய்வங்களை அவமதிக்கவும்,
பிள்ளையார் சிலைகளை உடைக்கவும், இராமருக்கு செருப்பு மாலை போடவும் வசதியாகிப்போனது; இல்லாவிட்டால் ,
சல்மான் ருஷ்டியைப்போலவோ தஸ்லிமா நஸரீனைப்போலவோ பாத்வா விதிக்கப்பட்டு உயிருக்குப்பயந்து
ஒளிந்து வாழ வேண்டி வந்திருக்கும். 60-வயதில் இளம்பெண்ணை மணந்து , 90-வயது தாண்டி நிம்மதியாய்
வாழ்ந்திருக்க முடியாது.//

விவேக சூடாமணி எழுதிய சங்கரரே எதிரில் வந்த மனிதனில் சாதிகுறித்து தொடாமல் ஒதுங்க அந்த
மனிதன் சிவபெருமான் என தெரிந்ததும் தவறை ஒப்புகொண்ட வரலாறுகளை நீங்கள்தானே சொல்கிறீர்கள்.

சாதி ரீதியான பார்பனிய அடக்குமுறை வரும் ஒவ்வொருதடவையும் சிவனே வரவேண்டி இருக்கிறது
(நந்தனார் சரிதம்)
பார்த்தார் சிவன் இனிமே நம்மால ஆகாது என பெரியாரை பிறக்கவைத்தார் ;)
(இப்படி சொன்னா கேட்டுவீங்களே)

தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post