ஜெயபேரிகை கொட்டடா

அஞ்சுக்கும் பத்துக்கும் மக்கள்
அலையும் என் நாட்டில்
கஞ்சிக்கில்லாமல் சனம்
சாகும் என் நாட்டில் - நிச்சயம்
கடவுள் இல்லை கடவுளை
வணங்குபவன் முட்டாள்!

வேலைதேடி வீதியில்
திரியுதொரு கூட்டம் -இலவச
சேலை வேண்டி அங்கே
நிற்குதொரு கூட்டம்
(கடவுள்............)

பிறக்கயில ஒரு சாதி
மணம்முடிக்கையில ஒரு சாதி
பிழைக்க மட்டும் வழி
காட்டவில்லை ஒரு சாதி
(கடவுள்............)

வீதிக்கு ஒரு சாதி
சாதிக்கு ஒரு சாமி
சமூக நீதிக்கு
இல்லைஒரு சாதி -
(கடவுள்............)

மறைநான்கில் காணாத
மந்திரமாம் இது
மறைநான்கை எதிர்த்திட்ட
நரைபூத்த கிழவன் சொல்
(கடவுள்............)

-தியாகு

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post