பாதை

கால நாவிதனின்
கத்திதளும்புகளை
உன்பாத சுவடுகளால்
வருடிஅழித்து விடு!

பாதையெங்கும்
தெறிக்கும்
இதய கதறல்கள்
மனசின்மேல் நடக்கும்
மந்திர காரன் நீ!

உன் வெளிச்ச
கசிவுகளால் மறையும்
விளக்கு கம்பங்கள்
சுவடுகளை தோண்டியபடி
என்பயணம் தொடர்கிறது!

-தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post