மரணம்

நாளும் முடிவும்
நிச்சயிக்கப்பட்டது
எனவே நீ ஆரம்பி!

சொந்த நாட்டின் தலைகுனிவை -தாய்
மொழியில் தொடரும் ஒரு சரிவை
பசியில் வாடுமுன் சோதரனை
காக்க நீ ஆரம்பி!

செத்தபின் சொர்க்கமே நரகமோ
வேண்டுமுன் பிராத்தனைகள் சரியே
வாழ்வில் பிடிசோறுதான் பெரிதுதெனும்
பேரிகை கொட்டி நீ ஆரம்பி!

தினமும் மலரும் மலர்போல
மலரை தினம்தொடும் வண்டாக
கடமை எனும் ஒரு கரம்கொண்டு
மடமைகள் பொடிபடும் பேச்சை
நீ ஆரம்பி!


-தியாகு

( நண்பர்களே இதற்க்கு முன்பு இந்த கவிதையை இங்கு இட்டு இருந்தேன் தவறுதலாக அதை அழித்து விட்டேன்எனவே மறுபடி இதை இடுகிறேன் மேலும் மட்டறுத்தல் மடல்களையும் இங்கே இடுகிறேன்!)
-தியாகு

10 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post