திமுக திருந்தனுமா முக திருந்தனுமா?




அதிமுக மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் காலில் விழ வைப்பதில் பேர் போன கட்சி .
அந்த கட்சி தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கு போன ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் இடம் கொடுக்கலைன்னு முக ரொம்பவே வருத்த படுகிறார் .

இதை ஒரு டிவில கிண்டி கிண்டி பேசிட்டு இருந்தாங்க அதில் ஒரு திமுக வேட்டி சொல்லுது ,ஏன் தா . பாண்டியனுக்கு அந்த மாதிரி புரோட்டோ கால் எல்லாம் இல்லையா ? எங்க தலைவருக்கு அவரது மகனுக்கு மட்டும்தான் புரோட்டாகாலான்னு?





இப்பதான் அந்தம்மா ஓ நம்ம காலில் இவங்கல்லாம் விழுந்துட்டு இருக்காங்களா இனிமே விழாதீங்கப்பான்னு மன்னிச்சி விட்டுடுச்சி
காலில் விழுந்தால் மந்திரி பதவி என்கிற புரோட்டோ காலே இப்பதான் மாறி இருக்கு உடனே எல்லா புரோட்டாவும் மாறிடுமா?
அடுத்து ஒரு இணையத்தில அதென்னா அம்மா 12 மணிக்கு சரக்கு கடையை திறக்கிறாங்கன்னு சொல்றாக ஆனா 9..30 க்கே சரக்கு பிளாக்கில கிடைக்கிதுன்னு போய் போட்டோவெல்லாம் எடுத்து போட்டிட்டு இருக்காங்க
அவங்களுக்கு நான் சொல்லும் விசயம் அண்ணாச்சி நீங்க குடிகாரனுங்க பின்னாடியே போய் போட்டோ பிடிக்காதீங்க அப்புறம் வாண்ணே கொஞ்சம் அடிச்சு பாருன்னு ஒரு டம்ளரில் ஊத்தி கொடுத்திட்டான்னா அப்புறம் உன்னை மாதிரி புரட்சிகாரன் சும்மா இருப்பியா
பேசு பேசுன்னு பேசி எல்லாரையும் கொன்னு பிடுவ நீ

சரி டெல்லி மாதிரி ஒரு மருவாதையான அரசியல் செய்ய போறாங்கன்னு நிமிந்து உக்கார்ந்து டிவி பார்த்தா ,முக  அந்தம்மாவுக்கு இன்னும் அகந்தை குறையலைன்னு என்னமோ பத்திரிக்கை நியூஸ் கொடுக்காரு

வயசான காலத்தில  உங்களால இனிமே சட்டசபைக்கு வரமுடியாது அதான் ஸ்டாலின் வராரு அவரு கூட நீட்டா பேசிக்கலாம்
எதாச்சிம் பிரச்சனைன்னா ? போராட்டம் கீராட்டம் பண்ணாம வச்சிகலாம்னு கமுக்கம அந்தம்மா அறிக்கை கொடுத்தா
நீங்க பழைய பாணி அரசியலுக்கு ஏங்கய்யா போறீங்க
டீசண்டா  முகத்துக்கு முன்னாடி சிரிச்சிகினு மக்களை மட்டும் ஏமாத்திகினு இருக்காங்கலாம் டெல்லில உங்களுக்கு தெரியாது
ஏன்ன நீங்க டெல்லி வாழ்கிறது நாமெல்லாம் தேய்ச்ஞ்டோம்னு பேசி அரசியல் செய்தவர்





 
ஸ்டாலின் கூட ஸ்நேகமா இருந்துட்டு போகட்டுமே விடுங்க
ஆனால் முக்கியமான மேட்டரில் எல்லாம் சண்டை போடாம விவாதம் செய்தா தானே நாடு கொஞ்சம் உருப்படும்  என்னா நாஞ் சொல்றது
தனிபட்ட சொத்து தகராறு ஏதும் இல்லையே அப்படின்னா விட்டுடலாம்ல விசயத்தை.

ஆனா இந்த பாமக காரறு பையன் அன்புமணி இதை எதிர்பார்த்தாராம் என்னா டிவிஸ்டு பாருங்க ?

//சென்னை: நேற்று திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா இன்று அவரை சட்டசபையில் பார்த்ததும் வணக்கம் கூறி அசத்தியுள்ளார். திமுகவும், அதிமுகவும் எலியும், பூனையுமாக மோதிக் கொள்வார்கள் என்று தான் மாநில, தேசிய, சர்வதேச அளவில் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அந்த அளவுக்கு அவர்கள் மோதிக் கொள்வார்கள். அறிக்கை மூலமாகவும் தொடர் போர் நடந்து வந்தது.
//

மீடியா கார பயலுக இதை மெனகெட்டு உக்கார்ந்து நாலைஞ்சு பேர அழைச்சிட்டு வந்து 1 மணிநேரமா கிண்டி கிட்டு இருக்காங்க

வேற விசயமே இல்லையா நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கு
பிரச்சனையே இல்லாத பிரச்சனையை ஏன் மீடியா மூடியா பேசுது

அய்யா உமது பார்வைக்கு

1.
பிரச்சாரம் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவினர் மேடைதோறும் ஜெயலலிதாவை தாக்கிப் பேசினார்கள். சொன்னீங்களே, செஞ்சீங்களா? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று ஜெயலலிதாவை குறி வைத்து பிரச்சாரம் செய்தார்கள்.
2.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப அரசியல் பற்றி மேடைதோறும் விமர்சித்தார். இப்படி தேர்தல் நேரத்திலும் கூட அவர்கள் மோதிக் கொண்டிருந்தனர்.




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post