வங்கி கடன் திருப்பிதராத நல்லவர்களே?

வங்கிகள் கடனை வசூலிக்கும் முறையில் மாற்றம் வேண்டும் குண்டர்களை வீட்டுக்கு அனுப்ப கூடாது ஏஜெண்டுகளை நியமிக்க கூடாது என போர்குரல் வலுக்கிறது . மிக்க மகிழ்ச்சி இததற்கு எதிர்ப்பு வேண்டும்தான்.
அதற்கான காரணங்கள் வலுவானவை சரியே
யாதவய்யா என்ற நபர் இறந்துவிட்டார் காரணம் வங்கிகளின் டார்ச்சர்
எல்லாம் சரிதான்
சுமார் பத்து ஆண்டுக்கு முன்பு ஒரு அம்பதாயிரம் வேண்டும் என்றால் மக்கள் எங்கே சென்று பணம் வாங்கினார்கள் கந்துவட்டி கும்பலிடம்தான்
கந்துவட்டி கும்பல் கந்துவட்டியை வசூலிக்க இதே வேலையைத்தான் செய்தது!
இப்போது கடன் பெறுவதை எளிதாக்கி இருக்கும் ஐசிஐசியை வங்கிகளை காண்கிறோம் அதன் வட்டி விகிதம் 24 சதவீதம்
இதன் மூலம் கல்யாணம் , வீட்டு செலவு, திடீர் செலவு போன்றவற்றை சமாளிக்க முடிந்ததே நமது மக்களால்
இதே சிட்டி பைனான்ஸ் எனும் நிறுவனம் பகல் கொள்ளையாக 50 சதவீதம் வசூல் செய்கிறது
எனது கேள்விகள் இதுதான்
1. பணம் வாங்கிவிட்டு கட்ட தவறிய அல்லது கட்ட மறுக்கும் நபர்களிடம் பணத்தை எப்படி வசூலிக்கலாம் 2. பணம் குறைவான தொகை என்பதற்காக விட்டு விடலாமா அந்நிலையில் அந்த வங்கியை எப்படி மேற்கொண்டு நடத்துவது .3.குண்டர்களை அல்லது ஏஜெண்டுகளை அனுப்பு வசூலிக்க கூடாது என சொல்லும் நபர்கள் அல்லது கட்சிகள் வேறு மாற்று திட்டம் என்ன வைத்து உள்ளது (இதனால் எல்லாம் நான் குண்டர்களை அனுப்பு வசூலிப்பதை சரியென சொல்லவில்லை )4. இதன் காரணமாக கடனை வாங்கி அதன் மூலம் பயன் பெற்று அதை சரியாக திருப்பி செலுத்து கொண்டுவரும் நபர்கள் வங்கி கடன் தறுவதில்லை எனும் நிலைபாடு எடுத்தால் பாதிக்கபடமாட்டார்களா இல்லையா ?5.பணம் வாங்கிவிட்டு கட்ட தவறுபவர் எந்தவகையில் ஆதரிக்க தக்க நபர் என சொல்லுங்கள்
தியாகு

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post