எச்சரிக்கை

நான் பதிவுலகத்துக்கு வந்து சுமார் 1.5 ஆண்டுகள் இருக்கும்
இத்தனை நாளில் நான் என்ன கற்றுகொண்டேன் அல்லது என்னிடம் இருந்து என்ன கொடுத்தேன் எனும் ஆராய்தலுக்கு புகவில்லை.

சமீப காலங்களில் பதிவுகள் படித்தல் மடல்கள் வாசித்தல் எனும் வேலைக்கு அதிகமா நேரம் ஒதுக்கிட்டமோ என பயப்படுகிறேன்.

அதன் விளைவுகள் சந்திக்க ஆரம்பிச்சு இருக்கேன் .
ஒரு நாளைக்கு அரைமணி நேரம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் எனும் தீர்மானமெல்லாம் போடவில்லை ஆனா குறைக்கனும் எனும் நிலைக்கு வந்துட்டேன்.
அத ஏன் எங்ககிட்ட சொல்றீஇங்கன்னு கேட்கிறீங்களா ?
பின்ன யாருகிட்ட சொல்வது ?;)

எதையும் பொதுமைபடுத்த முடியாது ஆனாலும் ஒரு சின்ன விசயம் என்னவென்றால்
வேலை நேரத்தில் பதிவுகள் படித்தல் பதில் எழுதுதல் எனும் செயலை
என்னை மாதிரி செய்யும் நண்பர்கள் கவனித்து சுதாரித்து கொள்ளுங்கள்.
உங்களது நேரத்தை நீங்களே வகுத்துகொண்டு செயல்படவும் .
அதனால் ஏற்படும் தீமைகளில் நீங்கள் இருந்து விடுபடவும் எல்லாம் வல்ல
இயந்திரத்தை(கணினியை) வேண்டிகொள்கிறேன்.
( என்னடா எப்பவுமே தியாகு நெகட்டிவ்வா பேசுறானேன்னு நினைச்சீங்கன்னா சாரிங்க இந்த பதிவு உங்களுக்கானது அல்ல)
நட்புடன் தியாகு

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post