உன்னை பார்க்காத நாட்கள்

உன்னை பார்க்காத நாட்கள் -சூரியன்
உதிக்காத நாட்கள் ஒருமுறையேனும் பார்த்திடு
உலகம் இருளாவதை தடுக்க!


நெஞ்சில் உனது நினைவலைகள்-எனது
கண்ணில் நினது கனவலைகள்கனவுகள்
காணாத கண்ணும் கண்ணல்லவே!

மண்பார்த்து மலரும் பூவில்லை-ஆதவன்
கண்பாராமல் மலர்வதும் மலரல்ல
நினைவுகள் மலர கண்ணே நீ வேண்டும்

பவளப்பாறைகளில் உனது காதலை
பதியம் போட்டு வைத்தேன்
பாதிவளருமுன் வந்துவிடுநேசம் வளர்த்துவிடு!

கம்யூனிச பொழுதுகள் விடியாத
காலையில் கண்ணே -உன்காதலாவது
மலரட்டும் சமத்துவம் மலர!

நெஞ்சமெனும் வீதியில் உனது
நினைவுகளை விதைத்து விட்டேன்
நேசம் வளர்க்க வந்துவிடு
நிறைய உள்ளது பேச!

அன்புடன்
தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post