Showing posts from September, 2006

வெள்ளி

வெள்ளி நிலவை வீசிவிட்டேன் வானத்திலே - உன் வெள்ளை சிரிப்பிருக்க வீணே அதுஎதற்கு! - தியாகு

போராளி

குளத்தை நிறைத்த மழையை சட்டைசெய்யாமல் தனித்து நின்றது போராளி தாமரை -தியாகு

உண்மை அல்லது கடவுள்

பாதிரிகள் இல்லாத தேவாலயங்களில் வேதங்கள் சொல்லாத பாடங்களில் புத்தர்கள் சொல்லாத மெளனங்களில் வாழ்கிறது இன்னும் உண்மை -தியாகு

கதிரே

இருளை புணர்ந்து விடிந்த இரவில் வேர்வை துளியாய் விளைந்த பனியில் படுத்த புட்களை எழுப்பும் கதிரே! -தியாகு

உலகம்

பணத்தாலும் பகட்டாலும் கடவுளின் படைப்பாலும் ஆனாதாஉலகம் -இல்லை பாட்டாளியின் கையால்ஆனது -தியாகு

Load More
That is All